Sunday, September 26, 2021

சி எம் சி மருத்துவ மனை

 *இந்த மருத்துவ மனை வேலை எப்போதிலிருந்து? எனக்கு சி எம் சி எப்போதிலிருந்து தெரியும்?*


*எனக்கு ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் என்கிற குழந்தை வயதினரின் டிபி. சத்துக் குறைவு மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைவால் வருவது. இரண்டையும் அதிகப்படுத்தினால் போய்விடும். அது வரை சில உபாதைகள். அதற்கான சிகிச்சை சி எம் சியில் பெறவேண்டும் என்பது 1957ல் அப்பா ஆரணியிலிருந்து மாற்றலாகி வேலூர் வருவதற்கான ஒரு காரணம். சிஎம்சிக்கு அருகிலிருந்த ஜட்கா ஸ்டேண்டு போஸ்டாபீசில் டெலிகிராபிஸ்ட் வாரம் மூன்று நாள் சி எம்சியில் சிகிச்சை.*


*சிஎம்சி அருகில் உள்ள தபாலாபீஸ் என்பதால் தபால் துறையின் யார் சிஎம்சிக்கு வந்தாலும் அங்கு வருவார்கள். அப்படி வந்தவர்களுள் ஒருவர் சாதுலா என்கிற அஸ்ஸாம் மாநில Extra Department ஊழியர். அவருடன் தொடர்பு மொழியே இல்லாத உரையாடல் நடக்கும். சிகிச்சைக்கு வந்தவர் வேலூரிலேயே தங்கிவிட்டார்.  ஏதோ கிடைத்த வேலையில் காலத்தை ஓட்டுவார்.. உடல் நலக் குறைவால் வேலைக்கு போக முடியாத போது அப்பாவை பார்க்க போஸ்டாபீஸ் வருவார். மௌனமாகவே நின்று கொண்டிருப்பார்.  ஆளுக்கு ஒரே ரூபா இரண்டு ரூபா போட்டு பத்து பதினைந்து ரூபா தருவார்கள். "அஸ்ஸாம் நோபடி. ஹியர் யூ" என்பார். அப்பா அம்மா அண்ணன் தம்பி யாருமில்லையா என்றால் தோளை உயர்த்தி இரு உள்ளங் கைகளையும் வெளிப் புறமாக கவிழ்ப்பார். இப்படியே ஐந்தாறு வருடங்கள். அப்புறம் அவரை காணவில்லை எங்கே போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.*

No comments:

Post a Comment