எமர்ஜென்ஸியின்போது ஸ்டேட் பேங்கிற்கு சம்பள கருவூல பில் வாங்க வரும் மாநில அரசு ஊழியர்கள் உதவியுடன் வேலூர் மத்திய சிறையைப் பார்க்க சென்றேன். அங்கே போனபோது மிசா கைதிகள் பகுதிக்கும் அழைத்துச் சென்றார். எதிர்பாராத விதமாக ஒரு நிகழ்வு. கையில் பிளாஸ்டிக் பக்கெட் நிறைய கோதுமை மாவை ஸ்டோர்ஸிலிருந்து சமையலறைக்கு லுங்கி அணிந்த ஒருவர் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். உடன் வந்த நண்பர் இவர்தான் உங்கள் கட்சியின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி என்றார். உங்கள் கட்சிக்காரர் என்று என்னையும் அவருக்கு அறிமுகப் படுத்தினார் வியப்பும் உற்சாகமும் பீறிட அவர் கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தேன். நலம் விசாரித்தேன். பின்னர் அவர் முதல்வரானபோது அவரை சிறையில் சந்தித்த கதையை நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டேன்.
No comments:
Post a Comment